பதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்
Tuesday, August 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.
ரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)
Friday, August 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
விழிப்பு வந்தபோது நான் எங்கிருக்கிருக்கிறேன் என்பதை மறந்துபோனேன். ஓ, குமாரின் வீடு. கைவலி அதிகமாக இருந்தது. மாத்திரைகளின் வீரியம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மணி பார்த்தேன், மாலை ஐந்து ஆகியிருந்தது. காலை எட்டு மணிக்கு நடந்த சம்பவம். டி.வி.யில் செய்தி சேனலில் பார்க்கலாமா, மனம் துடித்தது. ஹாலுக்கு வந்தேன். டி.வி.யை ஆன் செய்தேன்.
ரத்தம் பார்க்கின் - 2
Tuesday, August 13, 2013
Posted by கார்த்திக் சரவணன்
இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
இனி
திரும்பி ஓட்டமெடுத்தேன். அவன் அரிவாளை என்மீது வீசினான். என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது. "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை. சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது. அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான். நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது. ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன். நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.
CHENNAI EXPRESS - விமர்சனம்
Friday, August 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
நூறு வயதுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் ஷாருக் கானின் தாத்தா காலமாகிவிடுகிறார். அவரது அஸ்தியைக் கரைக்க பாட்டியின் அறிவுரைப்படி ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறார். கல்யாணம் பிடிக்காமல் ஊரைவிட்டு ஓடிச்சென்ற தமிழ்ப்பெண்ணான தீபிகாவையும், அவரை மீண்டும் ஊருக்கே கூட்டிச்செல்லும் அடியாட்களையும் சந்திக்கிறார். சந்திக்கிறார் என்பதை விட அடியாட்களிடம் மாட்டிக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும்.
வேறு வழியின்றி ஷாருக் கானும் தீபிகாவுடன் தீபிகாவின் கிராமத்துக்கே செல்ல நேரிடுகிறது. தமிழ் தெரியாத ஷாருக் கானும் தானும் காதலிப்பதாக தீபிகா தன் தந்தையிடம் சொல்ல, தந்தையும் மறுப்பு தெரிவிக்க, ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த முறைப்பையனும் சண்டைக்கு வர, நிலவரம் கலவரமாக மாறுகிறது. ஷாருக் அங்கிருந்து தப்பிச்செல்ல, மீண்டும் போலிசாரால் அதே இடத்துக்கு வரவழைக்கப்படுகிறார். இந்த முறை தீபிகாவுடன் தப்பிச்செல்கிறார் ஷாருக். அதன் பின்னர் அவர்களுக்குள் காதல் எப்படி வந்தது, வில்லன் குரூப் என்ன செய்தார்கள், முடிவு என்ன என்பதை தியேட்டரில் போய் பாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)




