பதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்



உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை.  ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.  நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.

ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்






இன்றைய நவநாகரீக இளைஞர்களின் செயல்பாடுகளை உள்ளது உள்ளபடியே திரையில் தந்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

ரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)




விழிப்பு வந்தபோது நான் எங்கிருக்கிருக்கிறேன் என்பதை மறந்துபோனேன்.  ஓ, குமாரின் வீடு.  கைவலி அதிகமாக இருந்தது.  மாத்திரைகளின் வீரியம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  மணி பார்த்தேன், மாலை ஐந்து ஆகியிருந்தது.  காலை எட்டு மணிக்கு நடந்த சம்பவம்.  டி.வி.யில் செய்தி சேனலில் பார்க்கலாமா, மனம் துடித்தது.  ஹாலுக்கு வந்தேன்.  டி.வி.யை ஆன் செய்தேன்.

ரத்தம் பார்க்கின் - 3


இதன் முற்பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்

பாகம் 1

பாகம் 2

இனி....


எனக்கு இப்போதுதான் உறைத்தது.  நான் கொலை செய்துவிட்டேன்.  இல்லை, அவன்தான் என்னைக் கொல்லவந்தான்.  நான் அவனைக் கொன்றாலும் அவன் என்னைக் கொன்றாலும் கொலை கொலைதான்.  மனம் என்னென்னமோ பிதற்றியது.

ரத்தம் பார்க்கின் - 2

இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்




இனி





திரும்பி ஓட்டமெடுத்தேன்.  அவன் அரிவாளை என்மீது வீசினான்.  என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது.  "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை.  சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது.  அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான்.  நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது.  ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன்.  நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.

ரத்தம் பார்க்கின் - 1

ரத்தம் பார்க்கின் - 1





அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நன்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது.  பொதுவாக ரயிலில் எனக்கு தூக்கமே வராது.  இருந்தும் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் அயர்ந்ததில் தூங்கிப்போனேன்.


CHENNAI EXPRESS - விமர்சனம்


நூறு வயதுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் ஷாருக் கானின் தாத்தா காலமாகிவிடுகிறார். அவரது அஸ்தியைக் கரைக்க பாட்டியின் அறிவுரைப்படி ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறார்.  கல்யாணம் பிடிக்காமல் ஊரைவிட்டு ஓடிச்சென்ற தமிழ்ப்பெண்ணான தீபிகாவையும், அவரை மீண்டும் ஊருக்கே கூட்டிச்செல்லும் அடியாட்களையும் சந்திக்கிறார்.  சந்திக்கிறார் என்பதை விட அடியாட்களிடம் மாட்டிக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும்.







வேறு வழியின்றி ஷாருக் கானும் தீபிகாவுடன் தீபிகாவின் கிராமத்துக்கே செல்ல நேரிடுகிறது.  தமிழ் தெரியாத ஷாருக் கானும் தானும் காதலிப்பதாக தீபிகா தன் தந்தையிடம் சொல்ல, தந்தையும் மறுப்பு தெரிவிக்க, ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த முறைப்பையனும் சண்டைக்கு வர, நிலவரம் கலவரமாக மாறுகிறது. ஷாருக் அங்கிருந்து தப்பிச்செல்ல, மீண்டும் போலிசாரால் அதே இடத்துக்கு வரவழைக்கப்படுகிறார்.  இந்த முறை தீபிகாவுடன் தப்பிச்செல்கிறார் ஷாருக்.  அதன் பின்னர் அவர்களுக்குள் காதல் எப்படி வந்தது, வில்லன் குரூப் என்ன செய்தார்கள், முடிவு என்ன என்பதை தியேட்டரில் போய் பாருங்கள்.