எங்க குலதெய்வம்

எப்போ பாத்தாலும் ஹோட்டல், சினிமான்னு எழுதி ரொம்ப போர் அடிக்குது. எனக்கே இப்படின்னா படிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்? அதனால இன்னிக்கு ஒரு மாற்றத்துக்கு எங்க குலதெய்வ சாமி பத்தி பாக்கலாம்.

சிம்ரன்ஸ் ஆப்பக்கடை

பலமுறை வேளச்சேரி நூறு அடி ரோடு வழியாகப் போகும்போது கண்ணில் பளிச்சென்று தென்படுகிறது. என்றாவது ஒரு நாள் போயாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அந்த நாளும் வந்தது.

இரண்டாம் உலகம்

வித்தியாசமான கதைக்களம், எதிர்பார்க்க வைக்கும் டிரைலர், பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என இரண்டு இசை அமைப்பாளர்கள், உலகெங்கும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு என எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் படம்.

இட்லி at The Grand Chola, Guindy

சில நாட்களுக்கு முன் கிராண்ட் சோழா ஹோட்டலில் மதியம் சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன்.  சென்ற வாரம் ஒரு மீட்டிங் (!?) இருந்ததால் இதே ஹோட்டலில் காலையில் சாப்பிடும் பாக்கியவான் ஆனேன். நமக்கு காலை உணவு என்றால் இட்லி அல்லது தோசைதான் பிடிக்கும் என்பதால் இட்லியுடன் கூடிய பிரேக்பாஸ்ட் சாப்பிடுவதென்று முடிவாயிற்று.  

TrueCaller-இல் பிரபல பதிவர்கள்

ஆண்டிராய்டு அப்ளிகேஷனான TrueCaller பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதற்கான லிங்க்.


இப்போ நம்ம பிரபல பதிவர்கள் Truecaller-இல் எந்தெந்தப் பெயர்களில் இருக்கிறார்கள்? பார்க்கலாமா.

ப்பா.. ஒரு கத சொல்லுப்பா

"ப்பா.. ஒரு கத சொல்லுப்பா..."  ரக்ஷித் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்று பயப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. காரணம் அவன் விரும்பிய கதையை, அவன் எதிர்பார்த்த ஒரு கதையை இதுவரையிலும் என்னால் சொல்ல முடிந்ததில்லை. சொல்லத் தெரியவில்லை என்றும் சொல்லலாம். என்ன அப்படிச் சொல்வதில் கொஞ்சம் மானபிரச்ச்னை எனக்கு!  

அழகுராஜா

காதலிக்க நேரமில்லை என்ற பழைய படம் அறுபதுகளில் வெளிவந்து சக்கைபோடு போட்டது. அந்தப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் சொல்வார், "நான் எடுக்குறது தான் படம், நீ நடிக்கிறது தான் நடிப்பு, இதை இந்த ஜனங்க பாத்தே தீரணும் அது அவங்க தலை எழுத்து" என்று. இந்த வரிகளை இயக்குநர் ராஜேஷ் மனப்பாடம் செய்துவிட்டார் போலும். ஓகே ஓகே கொடுத்த ஓவர் கான்பிடன்சில் தான் என்ன எடுத்தாலும் மக்கள் வந்து கைதட்டி சிரித்து ரசிப்பார்கள் என்று நினைத்துவிட்டார்.

ஆரம்பம்

ஆரம்பம் ஆரம்பித்தவுடனேயே அஜித் மும்பையின் முக்கியமான மூன்று இடங்களில் குண்டு வைக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று போலிசுக்கு போன் செய்து சொல்கிறார். போலிஸ் வந்து மக்களை அப்புறப்படுத்தி வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களால் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யமுடியாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் மூன்று கட்டிடங்களும் தரைமட்டமாகின்றன.