ராஜா ராணி

காதலனைப் பறிகொடுத்த காதலியும் காதலியைப் பறிகொடுத்த காதலனும் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறார்கள்.  இவர்களுக்குள் என்ன நடக்கிறது, இருவரின் கடந்தகால காதல்கள் என்னென்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான் ராஜா ராணி.  ப வடிவ காதல் கதையாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.  வாழ்த்துக்கள் அட்லி.

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து...

அனைவருக்கும் வணக்கம்.


நான் வலையுலகுக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்து இரண்டாம் வருடம் தொடங்குகிறது.  நேற்று தான் புதியவனாக எழுதத் தொடங்கியது போன்று இருக்கிறது, அதற்குள் ஒருவருடம் முடிந்து விட்டது எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  ஆனால் இந்த ஒரு வருடத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் ஏராளம்.  நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் பேசியும், மின்னஞ்சல் மூலமாகவும், முகநூலிலும், அரட்டையிலும் பதிவர்களுடனான நட்பு தொடர்கிறது.  இத்தனைக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் யாரையுமே அறிமுகம் இல்லை, ஆனால் இன்றோ ஸ்கூல் பையன் என்றால் வலையுலகில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது (தெரிந்திருக்கிறதா?).

நட்பு

படக்கதை படிக்கும் காலம்
பழக்கமாயிருந்தது!
நாவல்களின்போது
நட்பாய் மலர்ந்தது!
கவிதை வாசிப்பின்போது
காதலாய்க் கனிந்தது!
ஆம்! காதலாய்க் கனிந்தது!

மூடர் கூடம்

மூடர் கூடம் என்றால் முட்டாள்கள் சங்கமிக்கும் இடம் என்று பொருள் வருகிறது.  FOOLS GATHERING என்று கேப்ஷன் வைத்திருக்கிறார்கள்.  தலைப்பே நம்மை உள்ளே ஈர்க்கும் விதத்தில் இருக்கிறதே, கண்டிப்பாக படமும் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஞாயிறு மாலை காட்சிக்கு நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

ஹோட்டல் - சோழா கிராண்ட், கிண்டி

வணக்கம் நண்பர்களே,




சென்னையிலேயே மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.  இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.  இங்கே மொத்தம் 12 உணவகங்கள் உள்ளன, அதில் நாங்கள் சென்றது Madras Pavilion என்ற உணவகம்.  இங்கு தான் பபே முறையில் சாப்பாடு கிடைக்கிறது.

காணாமல் போன பதிவர் பற்றிய முக்கிய அறிவிப்பு





பெயர்: பால கணேஷ்

தளத்தின் பெயர்: மின்னல் வரிகள்

வயது: உடலுக்கு நாற்பதுக்கு மேல், மனதுக்கு இருபதுக்குக் கீழ்

ஆண்டிராய்டில் உங்கள் உடல்நலம்

நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம்.  தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.  ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?  நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா?  முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.

எழவு

நான் ராயப்பேட்டையில் வசித்த சமயம்.  நான் இருந்த வீடு ஒரு முட்டு சந்தின் கடைசி வீடு.  நாங்கள் இருந்தது தரை தளத்தில்.  மேல் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார்.  ஓனர் என்றால் ஓனர் அம்மா.  வீடு அந்த அம்மாவின் பெயரில் இருந்ததால் அவரது கணவர் ஒரு டம்மி பீசாகவே நடத்தப்பட்டு வந்தார்.  எங்கள் வீட்டுக்கு நேர் எதிரில் எங்களைப்போன்றே தரை தளத்தில் வாடகைக்கு வசிப்பவர்களும் மேல் வீட்டில் அந்த வீட்டின் ஓனரும் வசித்துவந்தனர்.  அந்த வீட்டு ஓனரும் அம்மாதான்.  அவர்களும் எங்கள் ஓனரும் சொந்தக்காரர்கள்.  இருவரும் அவரவர் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு சத்தமாக அவரவர் வீட்டுக் கதைகளைப் பேசுவது வழக்கம்.

பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு

வணக்கம் நண்பர்களே,

கடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.

ஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்

ஒரு படம்

நேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன்.  ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.  வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ.  ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான் பாடிய பாடல்

வணக்கம் நண்பர்களே,

பதிவர் சந்திப்பில் பாடல் பாடப்போவதாக பதிவு ஒன்று எழுதியதும் அன்றிலிருந்து "பாட்டு பாடலையா, பாட்டு பாடலையா" என்றும் பதிவர் சந்திப்பு முடிந்ததிலிருந்து இன்றுவரை "ஏன் பாடலை" என்றும் பலரும் அன்போடு (!) விசாரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  தொண்டை சரியில்லாத காரணத்தாலும் பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலும் பாடுவது ரத்து செய்யப்பட்டது.  இருந்தும் கோவை ஆவியின் பாடலுக்கு கோரஸ் பாடியது மனதுக்கு திருப்தியாக இருந்தது.  இந்த நிகழ்வு கடந்த வருடம் நடந்த முக்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்தது.

பதிவர் திருவிழா 2013 - துளிகள்

பதிவர் திருவிழா 2013 - துளிகள்


இந்த வருட பதிவர் சந்திப்பில் என் கண் முன் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே.  இல்லையென்றால் சிலவற்றை மறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்

வணக்கம் நண்பர்களே,


பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....