மேடைப்பேச்சு

மேடைப் பேச்செல்லாம் வாய்த்ததே இல்லை. அப்படியே அமைந்தாலும் மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிவிடுவது வழக்கம். ஆனால், ஏதேனும் விஷயம் குறித்து எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அதற்கான தரவுகள் இருக்கவேண்டும், நேரமும் வேண்டும். கூடவே கொஞ்சம் அமைதியான சூழல். அவ்வளவுதான்.

இந்த வருட தீபாவளி

பட்டாசில்லை, புகையில்லை. அமைதியாகக் கழிந்தது தீபாவளி.

அடுத்த வீட்டுக் கதையில் மூக்கை நுழைக்கும் ஆசாமிகள்

பக்கத்து வீட்டம்மணியின் குணாதிசயம் இப்படித்தான். ஆரம்ப காலத்தில், அவருக்கு எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை என வியந்து, அவருக்குத் தேவையான விவரங்களை நாங்கள் வெள்ளந்தியாகச் சொல்லியிருக்கிறோம். சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிகிறது, அவரது பண்பே இப்படித்தான் என்று. அவரைப்பற்றி ஓரளவுக்கு நாங்கள் புரிந்துகொண்ட பிறகு, தவிர்க்க ஆரம்பித்துவிட்டோம். இருந்தாலும், குழந்தைகள் மூலமாக அவருக்குத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார். அவரது மகள்கள் இருவருமே அவரைப்போலவே வருகிறார்கள் என்பது வேறு கதை.