சார், ஒரு நிமிஷம்
Monday, December 28, 2015
Posted by கார்த்திக் சரவணன்
கிண்டியில் ஸ்பிக் நிறுவன கட்டிடம் தெரியுமா? அதற்கு நேர்
எதிரில் தான் அந்த விபத்து நடந்தது. சனிக்கிழமையன்று காலை இரு சக்கர வாகனத்தில்
அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது மிக அகலமான சாலை. ஸ்பிக் நிறுவனம்
தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் சைதாப்பேட்டைக்கு இடதுபுறமும் அடையாறுக்கு
வலதுபுறமுமாக இரண்டாகப் பிரியும் சாலை. எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர் என்ன
நினைத்தாரோ தெரியவில்லை, இடதுபுறம் திரும்ப முற்பட அருகில் வந்துகொண்டிருந்த
மற்றொரு இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் இடித்துவிட்டார். இடித்ததில் இருவருமே
நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மிதமான வேகத்தில் சென்றதால் அதிக அடி இல்லை.
பின்னால் வந்துகொண்டிருந்த நான் சட்டென பிரேக் பிடித்து நின்றுவிட்டேன். வேகம்
அதிகமாக இருந்திருந்தால் விழுந்தவர் மீதோ அவருடைய வண்டி மீதோ மோதி நானும்
விழுந்திருக்கக் கூடும்.
பையன்
Friday, December 11, 2015
Posted by கார்த்திக் சரவணன்
காலைப்பனியை உருக்கும்
முயற்சியில் சூரியன் ஈடுபடத் தொடங்கியிருந்தான். ஒரு பக்கமாக திரும்பிப்
படுத்திருந்த மல்லிகாவின் வயிற்றில் கைவைத்து “உள்ள என்ன பாப்பா இருக்கு?” என்றான்
ராஜேஷ். “பையன்’” என்றாள். “சரி, கிளம்பு. வாக்கிங் போயிட்டு வந்திரலாம்” என்றான்.
வீடு
Monday, November 30, 2015
Posted by கார்த்திக் சரவணன்
ஆயிற்று. இந்த
பிப்ரவரி வந்தால் சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் முடியப்போகின்றது. இப்போது
இருப்பது ஏழாவது வீடு. இந்த வீட்டில் இப்போது இரண்டரை வருடங்கள். இதற்கு முன்
இருந்த ராயப்பேட்டை வீட்டில் நான்கு வருடங்கள் போக மூன்று வருடங்களில் ஐந்து
வீடுகள் மாறியிருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள்.
ஒற்றைக்கால் காக்கை
Monday, September 14, 2015
Posted by கார்த்திக் சரவணன்
ஒற்றைக்கால் காக்கை ஒன்று நெடு நாட்களாக வீட்டுக்கு வந்து செல்கிறது. காலை எட்டு மணி ஆனால் போதும், அடுப்படியின் ஜன்னலில் நின்று கரையத் தொடங்கும். சாப்பாடு வைத்தோமானால் அழகாக கொத்திக் கொத்தி சாப்பிடும். வைக்கவில்லையென்றால் கா கா என்று கரைந்து கேட்கும். அது எழுப்பும் ஒலி 'இன்னுமா ரெடியாகலை?' என்று கேட்பதுபோல் இருக்கும். எப்படியாவது போட்டோ எடுத்துவிடலாம் என்று கேமராவைக் கொண்டுசென்றால் பறந்துவிடும். அப்படி என்ன பயமோ... நேற்றைக்கு அதற்குத் தெரியாமலேயே ஜன்னல் அருகே கேமராவை வைத்துவிட்டேன். பறந்து வருவதையும் சாப்பிடுவதையும் பறந்து செல்வதையும் படமாக்கிக்கொண்டேன். சில நாட்களுக்குப் பின் அது வராமல் போகலாம். ஆனால் அந்தக் காக்கையின் நினைவுகள் இந்த ஒளிப்படம் மூலம் மனதில் நிற்கும்.
சிகிச்சை
Tuesday, September 01, 2015
Posted by கார்த்திக் சரவணன்
அவசரமாக ஊருக்குப் புறப்பட்டாக வேண்டும். அம்மாவுக்கு உடல்நிலை
சரியில்லை. போன வாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நடுராத்திரியில் அப்பா மட்டும்
தனியாளாய் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச்சென்று சிகிச்சை அளிக்கவைத்தார். ஈ.சி.ஜி.யில
பிரச்சனை இருக்கே, எதுக்கும் ஆஞ்சியோ பண்ணிப் பாத்திருங்க என்ற டாக்டர் பதினைந்து
நாட்களுக்கு மாத்திரை மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்து
விட்டார்.
கலர் பென்சில் 28.08.2015
Friday, August 28, 2015
Posted by கார்த்திக் சரவணன்
வலைப்பதிவர் திருவிழா
இந்த வருடத்தின் வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் இனிதே நடைபெற
இருக்கிறது. புதுக்கோட்டையில் ஏராளமான பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது கடந்த வருடம்
மதுரையில் நடந்த பதிவர் திருவிழாவின்போது தான் தெரியும். நானும் கலந்துகொள்ள
இருக்கிறேன். வருகைப் பதிவேட்டில் என் பெயரையும் எழுதிவிட்டேன்.
தழும்பு
Sunday, August 09, 2015
Posted by கார்த்திக் சரவணன்
இந்திய முழுவதும் கிளைகள் பரப்பியிருக்கும் அந்த நிறுவனம் அவனை திடீரென்று
ஒரு நாள் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தொழிற்சாலைக்கு பணி
மாற்றம் செய்தது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த அவன் தனது வேலையை
ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்திருந்த சமயம் அது. அவனது அம்மா ஒரு நாள்
அவனை அழைத்து உனக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். திருமணம் பற்றியும்
மணவாழ்க்கை பற்றியும் அதிகம் அறிந்திருந்தாலும் அனுபவப்பட்டிராத அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி
இருந்தாலும் அன்றைய வயதையும் பணி நிலையையும் கருத்தில் கொண்டு இப்ப என்னம்மா
அவசரம் என்று தன் தாயிடம் கூற, அவரோ அதை வழக்கமாக எல்லா வயசுப்பையன்களும்
சொல்வதுபோலவே எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.
Subscribe to:
Posts (Atom)
