ஒற்றைக்கால் காக்கை ஒன்று நெடு நாட்களாக வீட்டுக்கு வந்து செல்கிறது. காலை எட்டு மணி ஆனால் போதும், அடுப்படியின் ஜன்னலில் நின்று கரையத் தொடங்கும். சாப்பாடு வைத்தோமானால் அழகாக கொத்திக் கொத்தி சாப்பிடும். வைக்கவில்லையென்றால் கா கா என்று கரைந்து கேட்கும். அது எழுப்பும் ஒலி 'இன்னுமா ரெடியாகலை?' என்று கேட்பதுபோல் இருக்கும். எப்படியாவது போட்டோ எடுத்துவிடலாம் என்று கேமராவைக் கொண்டுசென்றால் பறந்துவிடும். அப்படி என்ன பயமோ... நேற்றைக்கு அதற்குத் தெரியாமலேயே ஜன்னல் அருகே கேமராவை வைத்துவிட்டேன். பறந்து வருவதையும் சாப்பிடுவதையும் பறந்து செல்வதையும் படமாக்கிக்கொண்டேன். சில நாட்களுக்குப் பின் அது வராமல் போகலாம். ஆனால் அந்தக் காக்கையின் நினைவுகள் இந்த ஒளிப்படம் மூலம் மனதில் நிற்கும்.