பதிலில்லா அழைப்புகள்
Monday, May 22, 2017
Posted by கார்த்திக் சரவணன்
அன்புள்ள சீனு,
நமது முதல் சந்திப்பைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அது எனக்கு
இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் மகனை அழைத்து வந்ததற்கான காரணம் ஒன்றைச்
சொன்னேன், நினைவிருக்கிறதா? அந்தக் காரணத்தை நினைத்தால் இப்போதும் சிரிப்பு
வருகிறது. அந்தக் காரணம் கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது, இல்லை?
அமெரிக்கா சென்றதும் கொம்பு முளைச்சிருச்சா என்றெல்லாம்
நினைக்கவில்லை. நீங்கள் இந்தியாவில் இருக்கும்போது எந்த அளவுக்கு தொலைபேசி
அழைப்புக்கு மறுமொழி செய்வீர்கள் என்பதை நான் அறிவேன். அது தவிர, நான் ஏற்கனவே
சொன்னபடி ஷிப்டில் வேலைக்குச் செல்பவர்களை நான் எப்போதும் தொந்தரவு செய்யமாட்டேன்.
அப்பா மில்லில் வேலை பார்த்தவர். டே ஷிப்ட், ஆப் நைட், புல் நைட் என்று மூன்று
விதமான ஷிப்டுகள். ஒவ்வொரு வாரமும் மாறி மாறி வரும். நைட் ஷிப்ட் முடித்துவிட்டு
வந்து பகலில் உறங்குவார். பார்க்கையில் பாவமாக இருக்கும். அதுவும் ஒரு காரணமாக
இருக்கலாம்.
நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்திருந்தேன். ஆனால், அவர்
எடுக்கவில்லை. என்னுடைய எண் அவருக்குத் தெரியும். நான் பொதுவாக ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை
என்றால், மீண்டும் அழைக்கமாட்டேன். அவருக்குத் தெரிந்திருக்கும், அவர் மீண்டும்
அழைக்கட்டும் என்று விட்டுவிடுவேன். ஆனால், அந்த நண்பர் என்னை அழைக்காதது
மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னை யாராவது அழைத்து, எடுக்க முடியாமல்
போனால் நான் மீண்டும் சம்பந்தப்பட்டவரை அழைத்துவிடுவேன். ஆனால், இந்த விஷயம் மனதை
நெருடிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கே தெரியும், நான் யாரையும் விஷயம் எதுவும்
இல்லாமல் அழைக்கமாட்டேன். அந்த நண்பர் ஒரு அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார்.
அது குறித்து தனிப்பட்ட முறையில் பாராட்டவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான்
அழைத்திருந்தேன். பரவாயில்லை.
இதேபோல், மனைவியின் தோழி ஒருவர் இருக்கிறார். எப்போது
அழைத்தாலும் எடுக்கமாட்டார். புத்தகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. சில
நாட்களுக்கு முன் அழைத்திருந்தோம், அவர் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து
மீண்டும் அழைத்தோம், அப்போதும் எடுக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பினோம், அதற்கும்
பதில் இல்லை. சரி, அவர் வேறு ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்று விட்டுவிட்டோம்.
மீண்டும் ஒரு வாரம் கழித்து அழைத்தோம். அப்போதும் எடுக்கவில்லை. மீண்டும் இரண்டு
நாட்கள், மூன்று நாட்கள் என்று இடைவெளி விட்டு அழைத்தோம். பதில் இல்லை. அதன்பிறகு,
ஒரு பத்து நாட்கள் கழித்து அழைத்தார். இத்தனை நாட்கள் அழைத்தும் பதில் அளிக்காதது
ஏன் என்று சற்றுக் காரமாகவே கேட்டுவிட்டார் மனைவி. மனைவியின் இயல்பு உங்களுக்கே
தெரியும், அவர் எத்தனை மென்மையாகப் பேசுவார் என்று. அவரையே கோபப்பட
வைத்திருக்கிறது இந்த பதிலில்லா அழைப்புகள். புத்தகத்தைக் கொடுத்தபிறகு நாங்கள்
அந்தத் தோழியை அழைப்பதே இல்லை. ஏதேனும் வேண்டுமென்றால், அவரே அழைப்பார்.
அவ்வளவுதான்.
நாள் ஒன்றின் பெரும்பாலான நேரத்தை, அலுவல் பணிகளில்
செலவிடுகிறீர்கள் என்பது வருத்தம்தான். ஆனால், சனி, ஞாயிறுகளில் வேலை இருக்காது,
அல்லவா? சரி, அந்த நேரத்தையாவது மனைவிக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவிடவும்.
டிரம்பின் புதிய கொள்கையால் உங்களுக்கும், அங்கு வசிக்கும் சக நண்பர்களுக்கும் பணி
விஷயத்தில் சற்று சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியா? இது தவிர, இப்போது
ஐ.டி. துறையில் பலர் வேலையை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்களாமே? இது குறித்து
எனக்கு எதுவும் தெரியாது. நேரமிருப்பின் விளக்கவும்.
கடந்த வாரம், நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். உங்களது
வலைப்பதிவின் இணைப்பின் மூலமாகத்தான் வந்திருந்தார். என்னுடைய பதிவுகளைப்
படித்துவிட்டு, சிலவற்றைப் பாராட்டினார். ‘பாஸ், அந்த கேரக்டரை சரியா வார்த்தையால
விளக்குறீங்க. உங்க எழுத்தைப் படிக்கப் படிக்க, அந்தக் கேரக்டர் கூடவே பயணிக்கிற
மாதிரியே இருக்கு’ என்றிருந்தார். எனக்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. ஆனாலும், இது
போன்ற பாராட்டுகள்தானே நம்மை மேலும் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருக்கும்? இந்தப்
பதிவை அவர் படித்தால், இதையெல்லாம் ஏன் இவன் பதிவில் எழுதுகிறான் என்று
எண்ணக்கூடும். பரவாயில்லை.
முகநூலில் ‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ என்றொரு போட்டி
வைத்திருக்கிறார்கள். அதாவது, நாம் நம் மனம் விரும்பும் ஒரு நபருக்கு ஒரு கடிதம்
எழுதவேண்டுமாம். யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம், எதைப் பற்றி வேண்டுமானாலும்
இருக்கலாம். இருநூறு வார்த்தைகளில் எழுதச் சொல்லியிருக்கிறார்கள். நானும்
கலந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். இதுவரை வெளிக்கொணராத, வேறு ஒரு நபருக்கு கடிதம்
எழுதலாம் என்றிருக்கிறேன். வலைப்பதிவுகள் வெகு ஜோராகப் போய்க்கொண்டிருந்த சமயம்,
நீங்கள் ஒரு கடிதப்போட்டி நடத்தினீர்கள், அல்லவா? அப்போதுதான், எனக்கு பதிவர்கள்
பலரையும் அறிமுகம் கிடைத்தது. முந்திரிக்கொட்டை போல கடிதம் எழுதியவர்களுக்கெல்லாம்
பாராட்டியும், குறை கூறியும் பின்னூட்டம் இட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.
நாம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப்
பேசுவோம். நிறைய பேசுவோம்.
பேசுவோம்.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
கடிதம்,
சீனு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா கடித்தத்தை பப்ளிக்கிலேயே போட்டு விட்டீங்களே... உண்மைதான்.. அழைப்புக்கு பதில் இல்லை எனில்... பயமாகவும் இருக்கும் என்னாச்சோ ஏதாச்சோ என, நம்மோடு பேசப் பிடிக்கவில்லையோ எனவும் ஒரு நெருடல் வரும்... ஆனா நெருங்கியவர்கள் எனில்.. பதில் கிடைக்கும்வரை அடிப்பதில் தப்பில்லை.
ReplyDeleteசில நேரங்களில்.. ஒரே நாளில் பல கோல்கள் வந்திருப்பின்.. சிலது விடுபட்டும் போக வாய்ப்பிருக்குதெல்லோ.
அடுத்த கடித்தத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஆஷா போஸ்லே:).
ஆமாம். முக்கியமான விஷயம் என்பதால்தான் மீண்டும் அழைத்தேன். அதுவும் உடனே அல்ல. இரண்டு நாட்கள் கழித்து, ஒரு வாரம் கழித்து என. அது சரி, எப்போ பேரை மாத்தினீங்க?
Deleteஅவங்க பேரை மாற்றினது விஜய் சூப்பர் சீனியர் சிட்டிசன் சிங்கர் போட்டியில் கலந்துக்கவாம் :)
Deleteஇல்லப்பா இது மாறு வேஷமாம் ஆஷா போஸ்லே சொன்னாங்க...அவங்க என்ன மாறு வேஷம் போட்டாலும் அவங்க ரீயும், யூஸும், கொயப்பமும் காமிச்சுக் கொடுத்துராதா என்ன இது அதிரானு? ஹஹஹ்
Deleteகீதா
வாவ் !! கடிதம் எழுதும் போட்டியா அங்கே. உற்சாகமாக இருக்குமே fb .அங்கே பதிவிட்டதை இங்கேயும் ஷேர் செய்யவும்
ReplyDeleteஆமாம். கண்டிப்பா அங்க எழுதப்போறேன். இங்கயும் ஷேர் பண்றேன்..
Deleteஎனது தொடர்பு வட்டத்தில் யாராச்சும் காணோம்னாலே மெயில் போட்டு தேடுவேன் ..சில நேரங்களில் அவர்கள் பதில் தரலைன்னா மனசுக்கு கஷ்டமாகிடும் ..இதற்காகவே வட்டத்தை சுருக்கி வச்சிருக்கேன் :) ..
ReplyDeleteபதிலில்லா அழைப்புகள் டென்க்ஷனாக்கிடும் என்னை ......
பேசுங்க பேசுங்க :) நாங்களும் தொடர்ந்து வருகிறோம் பேச்சை ரசிக்க :)
பதில் தரலேன்னா வேறு ஏதோ காரணம் இருக்கும்னு நினைக்கலாம். மறுபடியும் கூப்பிடுவாங்க... யாருமே நிரந்தரமா பிரிஞ்சு இருக்கவும் முடியாது, நிரந்தரமா சேர்ந்து இருக்கவும் முடியாது... :)
Deleteஅதுவும் உண்மைதான் :) முற்றிலும் யாரையும் தவிர்க்கவே முடியாது ..
Deleteஅஞ்சு நான் காணாமல் போறேன் என்னைத் தேடுங்க... ஏனெனில் தேடுவது ரொம்பப் பிடிக்கும் அஞ்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்:)
Deleteகர்ர்ர்ர்ர்ர் :) எனக்கு எங்க வீட்டுக்கு வர பிரபு ,அப்புறம் புறாங்க ஒரு நாள் வரலானாலும் கவலையாகிடும் ..தேடி கண்டுபிடிச்சாதான் மனசுக்கு நிம்மதியே .தேடுறது தப்பாஆ
Deleteஏஞ்சல் இந்தப் பூஸாரைக் கண்டு பிடிக்கறது கஷ்டமா என்ன மிஞ்சிப் மிஞ்சிப் போனா தேம்ஸ்ல குதிச்சுருவேன்னு அங்கதான் நிப்பாரு
Deleteகீதா
இரண்டு வால்கள் எனக்கு முன்னாலே இங்கே வந்துவிட்டு போய்விட்டன போலிருக்கே.....
ReplyDeleteஹா, ஹா.. ஆமாம். அவங்க இருவருமே முகநூலில் இல்லை. வலைப்பதிவில் மட்டுமே இருப்பதால் உடனடியா வந்துட்டாங்க...
Deleteமீன் வாலையும் பூஸ் வாலையும் ஒரு பப்புளிக்குப் பிளேஸ்ல வச்சு மானபங்கப்படுத்திய ட்றுத் க்கு என் வன்மையான கண்டனங்கள்ள்ள்... மிகுதியை என் செக்கரட்டறி வந்து பொயிங்குவா:)
Deleteஎன்னாது பொங்குறதா :) முதல்ல செகரட்டரி சம்பள பாக்கிக்கு அந்த வைர மோதிரத்தை கழட்டி ஆத்தங்கரையில் வைங்க :) வைக்கலேன்னா நான் இனிமே ட்ரூத்துக்கு செகரட்டரி சொல்லிட்டேன் :)
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் , ட்றுத் ஏதோ செய்வினை வச்சிட்டார்ர் நம்மை பிறி:)க்க:). அதுக்கா க ஒரு பாட்டு பாடுறேனே?:)
Deleteஹை ஏஞ்சல், அதிரா நோட் திஸ்...நானு வால் இல்ல....வேண்டா ஆஷா பாட்டெல்லாம் வேண்டாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் நீங்க பாடினா மதுரை பாவம்னு....
Deleteகீதா
என்னாது பொங்குறதா :) முதல்ல செகரட்டரி சம்பள பாக்கிக்கு அந்த வைர மோதிரத்தை கழட்டி ஆத்தங்கரையில் வைங்க :) வைக்கலேன்னா நான் இனிமே ட்ரூத்துக்கு செகரட்டரி சொல்லிட்டேன் :)// ஹஹஹஹஹ் செமையா போட்டீங்க ஏஞ்சல்!! ஹஹ்
Deleteகீதா
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்4 கீதா:)
Deleteஒரு கணம் எனக்குதான் நீங்கள் போன் பண்ணி நான் எடுக்கவில்லையோ என்று நினைத்தேன் ஆனால் அந்த நண்பர் ஒரு அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார் என்று சொன்ன போதுதான் அது நான் இல்லை என்ற முடிவிற்கு வந்தேன்.... உஷ் அப்பாடா....
ReplyDeleteஹா, ஹா... இல்லை. நான் யாருக்காவது போன் செய்வதாக இருந்தால் முக்கியமான விஷயம் இருக்கும். அதுமட்டும் அல்ல, வெளிநாட்டில் இருப்பவர்களின் நேரம் காலம் எனக்கு கொஞ்சம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.
Deleteநீங்கள் என்னை தொடர்பு கொள்ள எண்ணினால் வாட்ஸப் மூலம் தகவல் தெரியுங்கள் நேரம் கிடைத்தவுடன் உடனே தொடர்பு கொள்வேன்.
ReplyDeleteஓகே சார்... நிச்சயம் ஒருநாள் தொடர்புகொள்வேன்...
Deleteஉங்களைவிட முத்தவன்தான் ஆனால் சார் வேண்டாமே....
Deleteஅப்போ அண்ணாஆஆஆஆ ஓகேயா ட்றுத்?:)
Deleteஆமா நீங்க ஆன்ட்டி :) நான் அக்கா ,ட்ரூத் அண்ணா சரியாதான் சொல்லியிருக்கார் ஹஆஹாஆ :)
Deleteமேலே சொன்னது கார்த்திக் சரவணனுக்கு :) உங்களுக்கு ட்ரூத் தம்பி நான் தங்கச்சி :))))))))))))ஹாஹா
Deleteஎன்னப்பா மதுரை சகோ, ஏஞ்சல் ஆஷா போஸ்லே எல்லாம் நம்மள விட்டுப்புட்டு கும்மி அடிக்கறீங்க...ஹஹஹ....சரி சரி ஆஷா போஸ்லே நமக்கெலலம் சீனியர்தேன்..ஹிஹிஹி...எனக்கு இப்போ அம்ம தெரியுமா ஏஞ்சல்...ஹஹஹ
Deleteகீதா
////AngelinMay 23, 2017 6:24 PM
Deleteநான் அக்கா ,ட்ரூத் அண்ணா சரியாதான் சொல்லியிருக்கார் ஹஆஹாஆ :)//// ஹா ஹா ஹா கரீட்டு அஞ்சு:) சரியாத்தான் எனக்கு உறவுமுறை சொல்லியிருக்கிறீங்க... கீதா சின்னக்கா முறை:)
பதிலில்லா அழைப்புகள் .என்பார்வையில் ......... எப்போதுமே பதில் இல்லை என்று கோவிக்க மாட்டேன்.வேறு வழியில் அவர்கள் நலம் என்பதை உறுதிப்படுத்தினால் எந்தக்கோவமும் இல்லாமல் அமைதியாகிவிடுவேன். { ஏன்னா நானும் பதில் கொடுக்க மறக்குற ஆள்தான்} எப்போது மறுபடி அவர்கள் தொடர்பு கொண்டாலும் விட்ட இடத்திலிருந்து உற்சாகமாக அவர்களை ஏற்றுக்கொள்வேன்.அவரவருக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் .எனக்கு கட்டாயம் தொடர்பில் இருக்க வேண்டிய பலர் இருக்கிறார்கள் அவர்களிடமே நான் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறேன்.சிலர் வருஷத்திற்கு ஒருமுறை ஒற்றை மேசேஜ் இல் மனதளவில் நெருக்கமாக இருக்கிறார்கள்.எல்லாருமே முக்கியமானவர்கள்தான் .பதில் தராத உறவுகளுக்கு இடைவெளி கொடுப்பேனே தவிர என்னை முக்கியத்துவப்படுத்தவேண்டும் என உந்துதல் கொடுத்ததில்லை.இன்னும் நல்ல இடைவெளியில் அவசமில்லாமல் அப்பப்போ அளவாக பேசுவோரை ரெம்ப பிடிக்கும் .எல்லாத்துக்கும் காரணம் போன் பேசுறது அலேர்ஜி என்பதத்தான் சுத்தி வளைச்சு சொன்னேனாக்கும் .
ReplyDeleteஎப்போதும் பேசாமல், எப்போதாவது பேசுபவர்களிடம் கோபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
Delete//எப்போது மறுபடி அவர்கள் தொடர்பு கொண்டாலும் விட்ட இடத்திலிருந்து உற்சாகமாக அவர்களை ஏற்றுக்கொள்வேன்.// சூப்பர்...
//எல்லாத்துக்கும் காரணம் போன் பேசுறது அலேர்ஜி என்பதத்தான் சுத்தி வளைச்சு சொன்னேனாக்கும்// ஹாஹாஹா...
பதிலில்லா அழைப்புகள் என்ற தலைப்பு சொல்ல வந்த செய்தியை நுணுக்கமாகச் சொல்லிவிட்டது.
ReplyDeleteநல்லது... தொடரட்டும்...
ReplyDeleteஅட! சீனுவை இப்படித்தான் தொடர்புகொள்கிறீர்களா சரவணன்!!?? ஹஹஹ சரி அழகான கடிதம். ஆம் சரவணன் நமக்கு நெருங்கிய நண்பர்கள் எடுக்கவில்லை என்றால் முதலில் தோன்றாது. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கும் என்று நினைத்துவிடுவோம் ஆனால், இப்படிக் கடத்தினால் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் என்னுடன் தொடர்பு விட்டுப் போய் மீண்டும் தொடர்பு கொண்டால் மிகவும் மகிழ்ந்து அப்படியே தொடர ஆரம்பித்துவிடுவேன்.
ReplyDeleteஅது சரி கடிதப் போட்டியா...அட சூப்பர்! இங்கயும் வரும் தானே? காத்திருக்கிறோம்...தொடருங்கள்...
கீதா
கடிதக்கலை வாழ்க...
ReplyDeleteநானும் தொடர்கிறேன்
அவர் என்ன நிலையில் இருக்கிறாரோ?
ReplyDeleteநண்பர் என்ற முறையில் உரிமை எடுத்து பத்து முறை கூப்பிட வேண்டியது தானே? அப்படியும் பேச வில்லையென்றால் தமிழ்ச் சொல் நாலு சேர்த்து திட்ட வேண்டியது தானே? அதுவும் சீனு? சரியாப் போச்சு போங்க. அவர் போன் நம்பர் அனுப்புங்க. உங்களுக்கு சேர்த்து நான் தமிழ்ல பேசிடுறேன். ஹிஹி.