காதல் போயின் (சிறுகதை)

அவள் பெயர் சந்தியா. எனக்கு எதிர் பிளாட்டில்தான் குடியிருக்கிறாள். நான் அலுவலகம் போகும்போதோ வரும்போதோ அவளைக் காண்பதுண்டு. என்னைப் பார்த்தால் அவள், "ஹாய்" என்பாள். நானும் பதிலுக்கு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிடுவேன் அல்லது ஒரு சிறு புன்னகையுடன் கடந்துவிடுவேன். சில நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். பை த பை என் பெயர் அருண்.

ஸ்கூல் பையன் எனும் நான்

ஸ்கூல் பையன்

என்ன நினைத்து இந்தப் பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. வலைப்பதிவு தொடங்கியபோது என் மகன் படத்தை முன்வைத்து ஸ்கூல் பையன் என்று பெயரிட்டேன். மற்ற வலைத்தளங்களைப் படித்து அதே பெயரில் கருத்துக்களை சொல்ல, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.



முகநூல் பக்கம் வந்தபோது வலைப்பதிவர்களுக்குத் தெரியும் விதமாக ஸ்கூல் பையன் என்கிற பெயரிலேயே நட்பு அழைப்புக்கள் விடுக்கத் தொடங்கினேன். நம் வலைப்பதிவர்களும் என்னை அடையாளம் கண்டு நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நிற்க.... வலைப்பதிவுகளைப் பொறுத்தவரையில் இம்மாதிரியான பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் முகநூலிலோ இதை fake id என்கின்றனர். இருக்கட்டும். ஆனால் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு சிலருடைய பதிவுகளைப் படித்துவருகிறேன். அவர்களில் சிலர் என்னை நட்பு வட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். தெரியாதவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் பல வருடங்களாக நான் தொடர்ந்து வரும் சதீஷ்குமார் ஜோதிடர் மற்றும் அகநாழிகை பொன் வாசுதேவன் கூட இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது தான் கொஞ்சம் வருத்தப்படச் செய்கிறது.

Unfriend செய்வது ஒருபுறம் இருக்க, நான் விடுக்கும் சிலபல நட்பு அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் திரு.பெ.கருணாகரன் அவர்கள். பேக் ஐடி என்று நினைத்து நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலே விட்டிருந்தார்.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் இயங்குவதால் பல முறை கேலி கிண்டலுக்கு ஆளானதுண்டு. பொதுவாக அதையெல்லாம் கண்டுகொள்ளாத எனக்கு நெருக்கமான நண்பர்களே கிண்டல் செய்யும்போது கொஞ்சமே கொஞ்சம் உறுத்துகிறது. பிடித்த பத்து புத்தகங்களைப் பற்றிய தொடர்பதிவு வந்தபோது கூட நெருங்கிய நண்பர் என்னை tag செய்து கிண்டல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வந்திருந்த பின்னூட்டங்களிலும் நண்பர்கள் கிண்டல் செய்திருந்தனர். பரவாயில்லை. ஸ்க்ரீன்ஷாட் காண்பித்து அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

சில நாட்களுக்கு முன் என் மனைவிக்கு ஒரு முகநூல் கணக்கு தொடங்கிக் கொடுத்தேன். அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்யும்போது “Married to” என்ற பகுதியில் ஸ்கூல் பையன்னா எழுதறது என்று அவள் கேட்டபோது கொஞ்சம் ஜெர்க் ஆனேன். J

சீரியசான சில இடங்களில் பின்னூட்டம் இடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. பல இடங்களில் இறங்கி விளையாட முடியவில்லை. ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ் அமுதன் அவர்களது பதிவுக்கு பின்னூட்டம் எழுதியதில் பின்னால் வந்த பெண்மணி ஒருவர் “முட்டாப்பயலே, ஒழுங்கா படிச்சிட்டு வா” என்று எனக்கு பதில் கொடுத்திருந்தார்.

சொந்தப்பெயர் இருக்க எதற்கு புனைபெயரில்(!!) எழுதவேண்டும்? இதுபற்றிய ஒரு தனிப்பட்ட விவாதத்தில் நண்பர்கள் சிலர் ஸ்கூல் பையன் என்ற பெயர் நிலைத்துவிட்டது, இனி மாற்றவேண்டியதில்லை என்கின்றனர். ஆனால் பின்னாளில் நான் நடிக்கப்போகும், உதவி இயக்குனராக வேலை செய்யப்போகும் சில குறும்படங்களில் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு ஏன், நானே ஒரு புத்தகம் எழுதினால் என்ன பெயரில் எழுதுவது?

இவ்வாறாக சில கேள்விகள் மனதைக் குடைய சொந்தப் பெயரிலேயே எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். இது சொந்தப் பெயரிலேயே எழுதலாமா வேண்டாமா என்ற விவாதத்துக்காக இல்லை. ஆரம்பத்திலேயே செய்திருக்கவேண்டும்.

Profile-இல் பெயர் மாற்றுவதற்காக ஒரு பதிவா என்று கேட்காதீர்கள். சத்தமில்லாமல் பெயர் மாற்றிய பதிவர்களால் பலமுறை குழம்பியிருக்கிறேன். இதே நிலை என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம்.

ஆக, சரவணகார்த்திகேயன் என்ற சொந்தப் பெயரைக் கொஞ்சம் மாற்றி எழுத்துலகுக்காக “கார்த்திக் சரவணன்” என்று மாற்றிக்கொள்கிறேன். நாளை முதல் பெயர் மாற்றம் செய்கிறேன். மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். அல்லது மூன்று முறை சொல்லுங்கள்:

கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்


டியர் எம்.டி.எஸ்

டியர் எம்.டி.எஸ்.,

சமீபகாலமாக உனக்கு என்னவோ ஆகிவிட்டது. சில நாட்களாகவே இணையத்தில் இணைய மறுக்கிறாய். அப்படியே இணைந்தாலும் உலாவியில் வேகம் காட்டுவதில்லை. உன்னை நான் விலைகொடுத்து வாங்கியபோது உன்மீது எனக்கு துளியும் நம்பிக்கை இருக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் உன் சகோதரனுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இனி இந்த நிறுவனத்தின் வசதியை எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் புதுப்பொலிவுடன் ஆயிரம் ரூபாய்க்கு நாற்பது ஜிகாபைட் மற்றும் ஒன்பது புள்ளி எட்டு மெகாபைட் வேகம் என்று கூறி என்னைக் கிளர்ச்சியுறச் செய்தார் உன் நிறுவனத்தில் வேலை செய்யும் விற்பனை அதிகாரி. இருந்தும் நம்பிக்கையற்றவனாய் அவரைப் புறக்கணித்தேன். அலுவலக நண்பர் ஒருவர் உன்னுடைய சகோதரர் ஒருவரை வாங்கியிருப்பதாகவும் இதுவரை கண்டிராத இணைய வேகமும் இணையும் வேகமும் இருப்பதாய்க் கூற, இருந்தும் மனமில்லாமல் உன்னைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டே வாங்குவது என முடிவு செய்து அந்த நண்பரிடமிருந்தே உன் சகோதரரைப் பெற்று அவர் மூலம் என்னுடைய கணினியிலும் வயர் இல்லாத இணைப்பாக மடிக்கணினி மற்றும் அலைபேசிகளிலும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு உன் அபாரத் திறமையையும் வேகத்தையும் எண்ணி வியந்தேன்.

M.மீனாட்சி, C.A.

எனக்கென்று கல்லூரிக் காலம் என்று தனியாக எதுவும் இல்லை. 1994-97ஆம் ஆண்டுகளில் டிப்ளமா படித்தேன். அதன் பின்னர் வேலை செய்துகொண்டே பி.காம். படித்தேன். டிப்ளமா படித்த அந்த மூன்று ஆண்டுகள் பள்ளியும் அல்லாத கல்லூரியும் அல்லாத ஒரு இடைப்பட்ட நிலையிலேயே கடந்துவிட்டது. கமெர்ஷியல் பிராக்டிஸ். பி.காம் படிப்புக்கான அத்தனை பாடங்களும் இதில் அடக்கம். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பி.காம். படிக்க வேண்டிய நிலை வந்தால் எப்படி இருக்கும்? முதல் வருடம் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் அடுத்த வருடங்களில் சுதாரித்துவிட்டேன். பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியே வரும்போது டிஸ்டிங்ஷன். விஷயம் அதுவல்ல.

படிப்பினை

அவர் பெயர் பாஸ்கரன். போன வாரம் வரை எதிர் வீட்டுக்காரர். ஐம்பது லட்சத்துக்கு வீட்டை விற்றுவிட்டார். வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை. வீட்டை விற்று வந்த பணத்தில் வங்கியின் நிலுவைத்தொகை முழுவதும் வட்டியுடன் கட்டிவிட்டார். இப்போது மடிப்பாக்கத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு வேறு வீடு பார்த்து சென்றுவிட்டார்.

மூன்றாமாண்டு வலைப்பதிவர் திருவிழா - பின்னணி விவரங்கள்

தமிழ் வலைப்பதிவர் குழுவின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மதுரையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக மே மாதத்தில் மதுரையைச் சேர்ந்த பதிவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன், உணவு உலகம் சங்கரலிங்கம், சிவகாசிக்காரன் ராம்குமார் ஆகியோருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சீனா ஐயா, பிரகாஷ், ரமணி ஐயா மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் கண்டிப்பாக மதுரையில் நடத்திவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கத்தி

ஒரு கார்பரேட் நிறுவனம் குளிர்பான தொழிற்சாலை தொடங்கி தன்னூத்து கிராமத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களை அபகரிக்க நினைக்கிறது. தன்னூத்து கிராமத்தை சுற்றியிருக்கும் மற்ற கிராமங்கள் அந்த நிறுவனத்துக்கு தங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட, இவர்கள் மட்டும் விற்க மறுக்கிறார்கள். 

கற்பகாஸ்ரீ

நான் அப்பா ஆகப்போகிறேன் என்ற செய்தி வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. அது கடவுள் தந்த வரம் என நினைத்திருந்தேன். இருந்தாலும் மனதில் ஒரு ஓரமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. காரணம், என் பரம்பரையில் முதலில் ஆண்களே பிறக்கிறார்கள். என் தந்தை வழியில் அவர் தான் முதல், அம்மா வழியில் அம்மாவின் அண்ணன், மேலும் எனக்குத் தெரிந்த முன்னோர் வரை ஆண்கள் தான் முதலில் பிறந்திருக்கிறார்கள். என் எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் ரக்ஷித் அவதரித்தான்.

ரத்தம் என்ன வகை?

நண்பர் சீனுவின் இந்தப் பதிவைப் படித்ததும் என்னுடைய அனுபவத்தையும் கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

ஓ பாசிடிவ்! ஓ நெகடிவ்?



ஏன் இந்த சோதனை?

அலுவலக நண்பரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. நான்கு வயது தான் ஆகிறது. பிறக்கும்போதே தலையின் பின்புறம் துருத்திக்கொண்டும் முன்புறம் வலது கண் அருகில் லேசாக அமுங்கியும் இருந்தது. இது பின்னாளில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றும் அறுவை சிகிச்சை செய்தால் தான் சரியாகும் என்றும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை கால்கள் சற்று வளைந்து பிறந்திருந்ததால் அப்போதைக்கு அதை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

நல்லார் ஒருவர் உளரேல்!

நான் எப்போதும் அலுவலகத்துக்கு என் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில்நிலையம் வரை மட்டுமே. ரயில்நிலையத்திலிருக்கும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து முண்டகக்கண்ணியம்மன் கோவில் வரை ரயில் பயணம். அங்கிருந்து ஐந்து நிமிட நடை. அவ்வளவே. ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிடலாம். ஏதாவது வெளிவேலை இருப்பின் வண்டியை எடுத்துச் செல்வதுண்டு. இப்படித்தான் கடந்த புதன்கிழமை ஒரு சொந்த வேலையாகவும் வியாழனன்று பதிவர் துளசிதரன் இயக்கிய குறும்படம் வெளியீடு இருந்ததாலும் வெள்ளியன்று தி.நகரில் ஒருவரை சந்திக்க இருந்ததாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் வண்டியிலேயே வரவேண்டியதாயிற்று. இப்படி தொடர்ச்சியாக வந்ததில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டேன்.

சதுரங்க வேட்டை

ஞாயிறன்றே பார்த்துவிட்டேன். பீனிக்ஸ் மாலில் ஆன்லைனில் புக் செய்யலாம் என்று போனால் முதல் வரிசை சீட்கள் மட்டுமே இருந்தன. சப்தம் அதிகமாக இருக்கும், மகள் பயப்படுவாள். மேலும் கழுத்து வலி ஏற்படும் என்பதால் ஆன்லைன் புக்கிங்கைத் தவிர்த்துவிட்டு ஆப்லைனில் ஆளைப்பிடித்து காலை 11.50 மணி காட்சி பார்த்தாயிற்று.

பிசினஸ் பிரென்ட்ஷிப்பை முறிக்கும்!

அது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு என்று நினைவு. அலுவலக நண்பர் ஒருவர் திடீரென்று வேலையை விட்டுவிட்டார். தொன்னூறு நாட்கள் Notice Period உண்டு. அதையும் இறுதிக் கணக்கில் கழித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். அவர் வேலையை விடுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சரியாக வருவதில்லை. ஏதோ சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டிருந்தேன். "இப்பவே அவருக்கு நாப்பதாயிரம் வருதாம், அடுத்த வருஷம் ஒரு லட்சம் வருமாம்" என்று பலர் பொறாமைப்பட்டிருந்தனர்.

நான்சி

அவள் பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால் "நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.

பத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்

இதுவரை இந்த தொடர்பதிவுக்கு மூன்றுபேர் அழைத்துவிட்டார்கள். திரு.சம்பந்தம் (சொக்கன் சுப்பிரமணியன்) அவர்கள், சாமானியன் மற்றும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ். எழுதலாமா வேண்டாமா என்று என்று நினைத்திருந்த எனக்கு வெறும் பத்து கேள்விகள் தானே முயற்சி செய்வோம் என்று தொடங்கியதில் ஒரு சீரியஸ் பேட்டி கண்டது போலாகிவிட்டது. சீரியஸ் பேட்டி என்பதைவிட ஒரு சுய பரிசோதனை பதிவாகிவிட்டது. எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் சொந்த அனுபவங்களால் கொஞ்சம் சீரியசாகவே இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயணம்...!

அலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன். நல்லவேளையாக மனைவி கேட்டபோது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அவள் வந்திருந்தால் அனாவசிய அலைச்சல், டென்ஷன். இனி கடலூர் செல்வதென்றால் காலையில்தான் புறப்படவேண்டும். இப்போதே போகலாம்தான். ஆனால் நடுராத்திரியில் ஊர் ஊராக அலைவதில் எனக்கு விருப்பமில்லை. காலை ஐந்து மணிக்கு கிளம்பினால் பத்து மணிக்குள் சென்றுவிடலாம்.

பிறந்த நாள் Surprise!

அலுவலக நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்றல்ல, ஏப்ரல் 22ஆம் தேதி. நண்பர்களின் பிறந்த தினம் என்றால் அலுவலக கேண்டீன் அல்லது வராண்டாவில் வைத்து நெருங்கிய நண்பர்கள் மட்டும் புடைசூழ கேக் வெட்டுவது வழக்கம். வேறு யாருக்கும் சொல்லிக்கொள்வதில்லை. அன்றும் அதேபோல் தான் அரங்கேறியது. கடந்த மூன்று வருடங்களாக இதையே நாங்கள் செய்வதால் பிறந்தநாள் காண்பவருக்கு surprise என்பது இல்லாமலே போய்விட்டது. அதற்கு முன்னால் ஒரு விஷயம். எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் எனக்குத்தான் முதல் பிறந்த நாள். ஏப்ரல் பதினேழு, அடுத்ததாக ஏப்ரல் இருபத்திரண்டு, மே ஏழு, ஒன்பது மற்றும் இருபத்தேழு. என்னுடைய பிறந்த நாளை யாரும் கண்டுகொள்வதே இல்லை. காரணம் யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை.  புது வருடம் தொடங்கி முதல் பிறந்த நாள் என்னுடையது என்பதாலோ என்னவோ. நானும் என் பிறந்த நாளன்று அதிகம் propoganda செய்வதில்லை. அதிலும் எனக்கு விருப்பமும் இல்லை. இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்களா என்று திட்டுகிறீர்களா? திட்டிக்கொள்ளுங்கள்.

Nihongo!

தலைப்பைப் பார்த்துவிட்டு குழப்பத்தில் தலை கிறுகிறுத்து கீழே விழலாமா என யோசிக்கிறீங்களா? மேற்கொண்டு படியுங்கள்.

மீனாச்சி

நான் இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.

அவள் மீது எனக்கு எப்படி காதல் வந்தது என்பதெல்லாம் நினைவிலில்லை. அப்போது எனக்கு பதினெட்டு வயது, அவளுக்கு பதினாறு. கண்டோம், காதல் கொண்டோம். நான் தான் தயக்கத்துடன் அவளிடம் கூறினேன். ஒரு வாரம் கழித்து ஏற்றுக்கொண்டாள். அதன் பிறகு ஊரிலிருக்கும் பூங்கா, ஆற்றங்கரை, வாழைத்தோட்டம் என பல இடங்களில் சந்தித்துக்கொள்வோம்.

மனம் மயக்கும் மூணாறு - 5

கடந்த பகுதிகள்






மூணாறை விட்டு வெளியேற மனமில்லை என்றாலும் தேனியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் டிக்கட்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் புறப்பட வேண்டியதாயிற்று. இன்னொரு நாள் கூட தங்கியிருந்திருக்கலாம். தேனிக்கு இறங்கும் வழியில் லாக்ஹாட் கேப் (Lockhart Gap) என்ற இடம் அழகாக இருக்கும் என்பதால் அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம். அந்த இடத்தை அடைந்தபோது ஏற்கனவே ஐந்தாறு கார்கள் அங்கு நின்றிருந்தன. பலதரப்பட்ட மக்களும் அங்கு நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதோ நாங்கள் எடுத்த படங்கள் உங்களுக்காக.

மனம் மயக்கும் மூணாறு - 4

முந்தைய பகுதிகளைப் படிக்க





ஹோட்டல் ஹில்வியூவில் complimentary breakfast உண்டு என்பதால் அடுத்த நாள் காலை அங்கேயே சாப்பிட்டோம். ஹோட்டலின் முகப்பிலிருந்து நேர் கடைசியில் இருக்கிறது அவர்களது ரெஸ்டாரென்ட். காலை ஒன்பது மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் எட்டே முக்காலுக்கே ஆஜராகியிருந்தோம். வெளிநாட்டவரும் சில வட இந்திய குடும்பங்களும் மட்டுமே குழுமியிருந்தனர். வலதுபுறம் பாத்திரங்களில் சுடச்சுட பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதலில் கார்ன்ப்ளேக்ஸ்-உடன் பாலைக் கலந்து தொடங்கினோம். அடுத்து பிரெட், சென்னா, பட்டர் நான், என அடுத்தடுத்து சென்றது. கொதிக்கும் பாத்திரம் ஒன்றில் முட்டைகள் உருண்டுகொண்டிருக்க, அனைவரும் ஆளுக்கொன்றாய் அள்ளிக்கொண்டோம். 

மனம் மயக்கும் மூணாறு - 3

முந்தைய பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்





டாப் ஸ்டேஷனிலிருந்து கீழே இறங்கியதும் முதலில் வரும் இடம் குண்டலா டேம். பிரதான சாலையிலிருந்து திரும்பி சுமார் அரை கிலோமீட்டர் உட்புறம் செல்லவேண்டும். உள்ளே நுழைவதற்கு காருக்கும் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டும். உள்ளே சென்றதும் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது பெரும் கூட்டம்.

மனம் மயக்கும் மூணாறு - 2

முந்தைய பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்.


அவர் அப்படிச் சொன்னதும் எங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இருந்தாலும் அவரே சொன்னார், "சார், உங்களுக்கு ரூம் ரெடி ஆகிறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் இதோ, இந்த ரூம்ல fresh up ஆகிக்கோங்க" என்று கூறி ரிசப்ஷன் அருகிலேயே இருந்த அறை ஒன்றைக் காட்டினார். அது ஒரு சிறிய அறை. ஒரே ஒரு கட்டில், ஒரு டேபிள் சேர், லாக்கர், டிவி மட்டுமே இருந்தது. நேரத்தை வீணாக்காமல் அனைவரும் குளித்து ரெடியானால் நிறைய இடங்களை சுற்றிப் பார்க்க முடியும் என்பதால், "ம், சீக்கிரம்... ரெவ்வெண்டு பேரா போய் சோலிய முடிச்சிட்டு வாங்க" என்றேன் வடிவேலு ஸ்டைலில். அதற்கு நண்பர் இளங்கோவன், "ஒரே பாத்ரூம்ல ரெண்டுபேரா? சங்கடமா இருக்காது?" என்று அதே வடிவேலு ஸ்டைலில் சொல்ல, அறை முழுதும் சிரிப்பலையில் அதிர்ந்தது.

மனம் மயக்கும் மூணாறு - 1

அலுவலக நண்பர்களுடன் வருடத்துக்கு ஒரு முறை இரண்டு நாட்கள் எங்காவது டூர் செல்வது வழக்கம். 2௦11-இல் கொடைக்கானலுக்கும் 2௦12-இல் ஆலப்புழைக்கும் சென்ற அனுபவங்கள் மறக்க முடியாதது. மூணாறு செல்லவேண்டுமென்று கடந்த வருடம் திட்டமிட்டு எதிர்பாராத / தவிர்க்க முடியாத சில காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. அதிலும் மூன்றாம் முறை மிகவும் கொடுமை - ரயில் டிக்கட்களையும் ஹோட்டல் புக்கிங்கையும்  கடைசி நேரத்தில் கேன்சல் செய்தோம். இதனால் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டம். ஆறு பேர் என்பதால் தலைக்கு ஆயிரம் ரூபாய் தான். அதனால் நான்காம் முறை பேருந்தில் பயணம் செய்வதென்று முடிவாயிற்று. நாங்கள் புறப்படுவதற்கு முந்தைய தினம் தான் பேருந்துக்கும், கார்  மற்றும் தங்குவதற்கு ஹோட்டல் என முன்பதிவு செய்தோம்.

திருடா திருடா

"முருகா, எனக்கு வேலை கிடைச்சிருச்சுடா" மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் ரவி. இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என் முகம் மாறியதை அவன் கவனித்திருந்தான். "அப்போ இனிமே நீ வரமாட்டியா?" என்றேன். "டேய், வேண்டாம்டா நீயும் ஏதாவது வேலை தேடிக்கோ, அதுவரைக்கும் நான் உனக்கு சோறு போடுறேன். எவ்வளவு நாளானாலும் சரி. நான் பாத்துக்கறேன்" என்றான்.

ஆச்சி எனும் சகாப்தம்

அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.

யோசிக்கவேயில்லை. உடனடியாக கால் டாக்சிக்கு போன் செய்தேன், கோயம்பேடு சென்றாகவேண்டும். மனைவி குழந்தைகளுடன் அந்த நேரத்தில் அதுவும் பேருந்தில் செல்வது அசௌகர்யம் என்பதால் நான் மட்டும் பயணப்பட்டேன். விசாரித்ததில் ராஜபாளையத்துக்கு எந்தப் பேருந்தும் இல்லை, முதலாவதா நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் மதுரைக்குப் புறப்பட்டேன்.

கலர் பென்சில் - 03.03.2014

பதிவர் சந்திப்பு

இந்த வருடம் தொடங்கியது முதலே பதிவர் சந்திப்பாகத்தான் கழிந்துகொண்டிருக்கிறது. ஜன.1 ஆம் தேதி எங்கள் ப்ளாக் கௌதமன் சார் சென்னையில் சந்திப்பதாக முகநூலில் அழைப்பு விடுக்க, நான், வாத்தியார் பால கணேஷ், கோவை ஆவி, சீனு, ரூபக் ராம் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அடுத்தடுத்து பதிவர்களின் புத்தக வெளியீடு, புத்தகத் திருவிழா என்று நேற்று பதிவர் சேட்டைக்காரன் அவர்களின் சென்னை விஜயம் வரை இந்த ஆண்டு பதிவர் சந்திப்பாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.

இப்படிக்கு இறந்துபோனவன்

இந்தக்கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் - விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

எனக்கு உடலில் சிறு பிரச்சனை. சிறு பிரச்சனை தான். ஆனாலும் பலரும் அதைப் பெரிய விஷயமாக பூதாகரமாக்கி இது பெரும் பிரச்சனைதானோ என்று என்னை என்னிடமே கேள்வி கேட்கவைத்துவிடுகிறார்கள்.  எனக்கு வலது காலை விட இடது கால் உயரத்திலும் பருமனிலும் கொஞ்சம் சிறியது. ஆம், போலியோ பாதித்திருக்கிறது. சில காலங்களுக்கு முன் ஊனமுற்றவன் என்றும் சம காலத்தில் மாற்றுத்தினாளி என்றும் அழைக்கப்பட்ட ஏராளமானோரில் நானும் ஒருவன்.

தாத்தா

என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.

வீரம்

ஒட்டன்சத்திரத்தில் அஜித்தும் அவரது தம்பிகள் நான்கு பேரும் திருமணம் செய்யவேண்டாம் என்ற முடிவுடன் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். காரணம்  பெண் ஒருத்தி வீட்டுக்குள் வந்தால் அவள் ஒற்றுமையாக வாழும் ஐந்து பேரையும் பிரித்துவிடுவாள் என்று நினைக்கிறார்கள். அவர்களில் இரண்டு தம்பிகள் இரண்டு வேறு பெண்களைக் காதலிக்க அவரியாகது காதலுக்கு அஜித் பச்சைக்கொடி காட்டவேண்டும் என்றால் அவர் யாரிடமாவது காதல்வயப்படவேண்டும் என்று கோவில் வேலையாக ஊருக்கு வந்திருக்கும் தமன்னாவைக் கோர்த்துவிடுகிறார்கள். அஜித்தும் சகோக்களும் பொதுவாகவே வந்த சண்டைக்கு வாள் எடுப்பவர்கள். பக்கா அகிம்சாவாதியான தமன்னாவிடம் தான் சண்டை சச்சரவுக்குப் போகாதவன் என்று சொல்லி காதலிக்கிறார்.


கொஞ்சம் லேட்டா திரும்பிப் பார்க்கிறேன்

திரும்பிப் பார்க்கிறேன்கிற பதிவு எழுதி நண்பர் ராஜபாட்டை ராஜாவும் ராஜி அக்காவும் என்னை கோர்த்து விட்டிருந்தாங்க. ஆனா பாருங்க, அதிகமான வேலை மற்றும் சோம்பல் காரணமா எழுத முடியாம போச்சு. வருஷமும் முடிஞ்சு போச்சு, இருந்தாலும் எழுதலைன்னா நண்பர்கள் கோவிச்சுப்பாங்க அப்படிங்கறதால இதோ, இந்தப்பதிவு.