பதிவர் சந்திப்பு

இந்த வருடம் தொடங்கியது முதலே பதிவர் சந்திப்பாகத்தான் கழிந்துகொண்டிருக்கிறது. ஜன.1 ஆம் தேதி எங்கள் ப்ளாக் கௌதமன் சார் சென்னையில் சந்திப்பதாக முகநூலில் அழைப்பு விடுக்க, நான், வாத்தியார் பால கணேஷ், கோவை ஆவி, சீனு, ரூபக் ராம் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அடுத்தடுத்து பதிவர்களின் புத்தக வெளியீடு, புத்தகத் திருவிழா என்று நேற்று பதிவர் சேட்டைக்காரன் அவர்களின் சென்னை விஜயம் வரை இந்த ஆண்டு பதிவர் சந்திப்பாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.