கற்பகாஸ்ரீ

நான் அப்பா ஆகப்போகிறேன் என்ற செய்தி வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. அது கடவுள் தந்த வரம் என நினைத்திருந்தேன். இருந்தாலும் மனதில் ஒரு ஓரமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. காரணம், என் பரம்பரையில் முதலில் ஆண்களே பிறக்கிறார்கள். என் தந்தை வழியில் அவர் தான் முதல், அம்மா வழியில் அம்மாவின் அண்ணன், மேலும் எனக்குத் தெரிந்த முன்னோர் வரை ஆண்கள் தான் முதலில் பிறந்திருக்கிறார்கள். என் எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் ரக்ஷித் அவதரித்தான்.

ரத்தம் என்ன வகை?

நண்பர் சீனுவின் இந்தப் பதிவைப் படித்ததும் என்னுடைய அனுபவத்தையும் கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

ஓ பாசிடிவ்! ஓ நெகடிவ்?



ஏன் இந்த சோதனை?

அலுவலக நண்பரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. நான்கு வயது தான் ஆகிறது. பிறக்கும்போதே தலையின் பின்புறம் துருத்திக்கொண்டும் முன்புறம் வலது கண் அருகில் லேசாக அமுங்கியும் இருந்தது. இது பின்னாளில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றும் அறுவை சிகிச்சை செய்தால் தான் சரியாகும் என்றும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை கால்கள் சற்று வளைந்து பிறந்திருந்ததால் அப்போதைக்கு அதை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.