நடைப்பயிற்சிக்குச் செல்வதென்றால், எனக்குப் பல வழிகள் உண்டு. முதலாவது, உள்ளகரம், மடிப்பாக்கம் செல்லும் மார்க்கம். இரண்டாவது, வேளச்சேரி செல்லும் பெரிய சாலை. மூன்றாவது, அதற்கு எதிர்த்திசையான கிண்டி செல்லும் பெரிய சாலை. நான்காவது, நங்கநல்லூர் வீதிகள். இவற்றில் வேளச்சேரி, கிண்டி செல்லும் சாலைகள் விசாலமானவையாக இருந்தாலும், வண்டிகளின் இரைச்சலும், இருசக்கர வாகன ஓட்டிகளின் வேகமும் அமைதியாக நடக்க விடுவதில்லை. மடிப்பாக்கம் செல்லும் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்துகொண்டு இருப்பதாலும், சமீபத்திய மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களாலும் சீரான நடை பயில்வது என்பது கடினமான காரியமான ஒன்றாக இருக்கிறது.