கத்தி

ஒரு கார்பரேட் நிறுவனம் குளிர்பான தொழிற்சாலை தொடங்கி தன்னூத்து கிராமத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களை அபகரிக்க நினைக்கிறது. தன்னூத்து கிராமத்தை சுற்றியிருக்கும் மற்ற கிராமங்கள் அந்த நிறுவனத்துக்கு தங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட, இவர்கள் மட்டும் விற்க மறுக்கிறார்கள். 

கற்பகாஸ்ரீ

நான் அப்பா ஆகப்போகிறேன் என்ற செய்தி வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. அது கடவுள் தந்த வரம் என நினைத்திருந்தேன். இருந்தாலும் மனதில் ஒரு ஓரமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. காரணம், என் பரம்பரையில் முதலில் ஆண்களே பிறக்கிறார்கள். என் தந்தை வழியில் அவர் தான் முதல், அம்மா வழியில் அம்மாவின் அண்ணன், மேலும் எனக்குத் தெரிந்த முன்னோர் வரை ஆண்கள் தான் முதலில் பிறந்திருக்கிறார்கள். என் எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் ரக்ஷித் அவதரித்தான்.

ரத்தம் என்ன வகை?

நண்பர் சீனுவின் இந்தப் பதிவைப் படித்ததும் என்னுடைய அனுபவத்தையும் கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

ஓ பாசிடிவ்! ஓ நெகடிவ்?



ஏன் இந்த சோதனை?

அலுவலக நண்பரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. நான்கு வயது தான் ஆகிறது. பிறக்கும்போதே தலையின் பின்புறம் துருத்திக்கொண்டும் முன்புறம் வலது கண் அருகில் லேசாக அமுங்கியும் இருந்தது. இது பின்னாளில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றும் அறுவை சிகிச்சை செய்தால் தான் சரியாகும் என்றும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை கால்கள் சற்று வளைந்து பிறந்திருந்ததால் அப்போதைக்கு அதை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

நல்லார் ஒருவர் உளரேல்!

நான் எப்போதும் அலுவலகத்துக்கு என் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில்நிலையம் வரை மட்டுமே. ரயில்நிலையத்திலிருக்கும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து முண்டகக்கண்ணியம்மன் கோவில் வரை ரயில் பயணம். அங்கிருந்து ஐந்து நிமிட நடை. அவ்வளவே. ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிடலாம். ஏதாவது வெளிவேலை இருப்பின் வண்டியை எடுத்துச் செல்வதுண்டு. இப்படித்தான் கடந்த புதன்கிழமை ஒரு சொந்த வேலையாகவும் வியாழனன்று பதிவர் துளசிதரன் இயக்கிய குறும்படம் வெளியீடு இருந்ததாலும் வெள்ளியன்று தி.நகரில் ஒருவரை சந்திக்க இருந்ததாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் வண்டியிலேயே வரவேண்டியதாயிற்று. இப்படி தொடர்ச்சியாக வந்ததில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டேன்.

சதுரங்க வேட்டை

ஞாயிறன்றே பார்த்துவிட்டேன். பீனிக்ஸ் மாலில் ஆன்லைனில் புக் செய்யலாம் என்று போனால் முதல் வரிசை சீட்கள் மட்டுமே இருந்தன. சப்தம் அதிகமாக இருக்கும், மகள் பயப்படுவாள். மேலும் கழுத்து வலி ஏற்படும் என்பதால் ஆன்லைன் புக்கிங்கைத் தவிர்த்துவிட்டு ஆப்லைனில் ஆளைப்பிடித்து காலை 11.50 மணி காட்சி பார்த்தாயிற்று.

பிசினஸ் பிரென்ட்ஷிப்பை முறிக்கும்!

அது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு என்று நினைவு. அலுவலக நண்பர் ஒருவர் திடீரென்று வேலையை விட்டுவிட்டார். தொன்னூறு நாட்கள் Notice Period உண்டு. அதையும் இறுதிக் கணக்கில் கழித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். அவர் வேலையை விடுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சரியாக வருவதில்லை. ஏதோ சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டிருந்தேன். "இப்பவே அவருக்கு நாப்பதாயிரம் வருதாம், அடுத்த வருஷம் ஒரு லட்சம் வருமாம்" என்று பலர் பொறாமைப்பட்டிருந்தனர்.