காதல் போயின் (சிறுகதை)

அவள் பெயர் சந்தியா. எனக்கு எதிர் பிளாட்டில்தான் குடியிருக்கிறாள். நான் அலுவலகம் போகும்போதோ வரும்போதோ அவளைக் காண்பதுண்டு. என்னைப் பார்த்தால் அவள், "ஹாய்" என்பாள். நானும் பதிலுக்கு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிடுவேன் அல்லது ஒரு சிறு புன்னகையுடன் கடந்துவிடுவேன். சில நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். பை த பை என் பெயர் அருண்.

ஸ்கூல் பையன் எனும் நான்

ஸ்கூல் பையன்

என்ன நினைத்து இந்தப் பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. வலைப்பதிவு தொடங்கியபோது என் மகன் படத்தை முன்வைத்து ஸ்கூல் பையன் என்று பெயரிட்டேன். மற்ற வலைத்தளங்களைப் படித்து அதே பெயரில் கருத்துக்களை சொல்ல, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.



முகநூல் பக்கம் வந்தபோது வலைப்பதிவர்களுக்குத் தெரியும் விதமாக ஸ்கூல் பையன் என்கிற பெயரிலேயே நட்பு அழைப்புக்கள் விடுக்கத் தொடங்கினேன். நம் வலைப்பதிவர்களும் என்னை அடையாளம் கண்டு நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நிற்க.... வலைப்பதிவுகளைப் பொறுத்தவரையில் இம்மாதிரியான பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் முகநூலிலோ இதை fake id என்கின்றனர். இருக்கட்டும். ஆனால் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு சிலருடைய பதிவுகளைப் படித்துவருகிறேன். அவர்களில் சிலர் என்னை நட்பு வட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். தெரியாதவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் பல வருடங்களாக நான் தொடர்ந்து வரும் சதீஷ்குமார் ஜோதிடர் மற்றும் அகநாழிகை பொன் வாசுதேவன் கூட இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது தான் கொஞ்சம் வருத்தப்படச் செய்கிறது.

Unfriend செய்வது ஒருபுறம் இருக்க, நான் விடுக்கும் சிலபல நட்பு அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் திரு.பெ.கருணாகரன் அவர்கள். பேக் ஐடி என்று நினைத்து நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலே விட்டிருந்தார்.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் இயங்குவதால் பல முறை கேலி கிண்டலுக்கு ஆளானதுண்டு. பொதுவாக அதையெல்லாம் கண்டுகொள்ளாத எனக்கு நெருக்கமான நண்பர்களே கிண்டல் செய்யும்போது கொஞ்சமே கொஞ்சம் உறுத்துகிறது. பிடித்த பத்து புத்தகங்களைப் பற்றிய தொடர்பதிவு வந்தபோது கூட நெருங்கிய நண்பர் என்னை tag செய்து கிண்டல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வந்திருந்த பின்னூட்டங்களிலும் நண்பர்கள் கிண்டல் செய்திருந்தனர். பரவாயில்லை. ஸ்க்ரீன்ஷாட் காண்பித்து அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

சில நாட்களுக்கு முன் என் மனைவிக்கு ஒரு முகநூல் கணக்கு தொடங்கிக் கொடுத்தேன். அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்யும்போது “Married to” என்ற பகுதியில் ஸ்கூல் பையன்னா எழுதறது என்று அவள் கேட்டபோது கொஞ்சம் ஜெர்க் ஆனேன். J

சீரியசான சில இடங்களில் பின்னூட்டம் இடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. பல இடங்களில் இறங்கி விளையாட முடியவில்லை. ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ் அமுதன் அவர்களது பதிவுக்கு பின்னூட்டம் எழுதியதில் பின்னால் வந்த பெண்மணி ஒருவர் “முட்டாப்பயலே, ஒழுங்கா படிச்சிட்டு வா” என்று எனக்கு பதில் கொடுத்திருந்தார்.

சொந்தப்பெயர் இருக்க எதற்கு புனைபெயரில்(!!) எழுதவேண்டும்? இதுபற்றிய ஒரு தனிப்பட்ட விவாதத்தில் நண்பர்கள் சிலர் ஸ்கூல் பையன் என்ற பெயர் நிலைத்துவிட்டது, இனி மாற்றவேண்டியதில்லை என்கின்றனர். ஆனால் பின்னாளில் நான் நடிக்கப்போகும், உதவி இயக்குனராக வேலை செய்யப்போகும் சில குறும்படங்களில் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு ஏன், நானே ஒரு புத்தகம் எழுதினால் என்ன பெயரில் எழுதுவது?

இவ்வாறாக சில கேள்விகள் மனதைக் குடைய சொந்தப் பெயரிலேயே எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். இது சொந்தப் பெயரிலேயே எழுதலாமா வேண்டாமா என்ற விவாதத்துக்காக இல்லை. ஆரம்பத்திலேயே செய்திருக்கவேண்டும்.

Profile-இல் பெயர் மாற்றுவதற்காக ஒரு பதிவா என்று கேட்காதீர்கள். சத்தமில்லாமல் பெயர் மாற்றிய பதிவர்களால் பலமுறை குழம்பியிருக்கிறேன். இதே நிலை என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம்.

ஆக, சரவணகார்த்திகேயன் என்ற சொந்தப் பெயரைக் கொஞ்சம் மாற்றி எழுத்துலகுக்காக “கார்த்திக் சரவணன்” என்று மாற்றிக்கொள்கிறேன். நாளை முதல் பெயர் மாற்றம் செய்கிறேன். மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். அல்லது மூன்று முறை சொல்லுங்கள்:

கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்


டியர் எம்.டி.எஸ்

டியர் எம்.டி.எஸ்.,

சமீபகாலமாக உனக்கு என்னவோ ஆகிவிட்டது. சில நாட்களாகவே இணையத்தில் இணைய மறுக்கிறாய். அப்படியே இணைந்தாலும் உலாவியில் வேகம் காட்டுவதில்லை. உன்னை நான் விலைகொடுத்து வாங்கியபோது உன்மீது எனக்கு துளியும் நம்பிக்கை இருக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் உன் சகோதரனுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இனி இந்த நிறுவனத்தின் வசதியை எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் புதுப்பொலிவுடன் ஆயிரம் ரூபாய்க்கு நாற்பது ஜிகாபைட் மற்றும் ஒன்பது புள்ளி எட்டு மெகாபைட் வேகம் என்று கூறி என்னைக் கிளர்ச்சியுறச் செய்தார் உன் நிறுவனத்தில் வேலை செய்யும் விற்பனை அதிகாரி. இருந்தும் நம்பிக்கையற்றவனாய் அவரைப் புறக்கணித்தேன். அலுவலக நண்பர் ஒருவர் உன்னுடைய சகோதரர் ஒருவரை வாங்கியிருப்பதாகவும் இதுவரை கண்டிராத இணைய வேகமும் இணையும் வேகமும் இருப்பதாய்க் கூற, இருந்தும் மனமில்லாமல் உன்னைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டே வாங்குவது என முடிவு செய்து அந்த நண்பரிடமிருந்தே உன் சகோதரரைப் பெற்று அவர் மூலம் என்னுடைய கணினியிலும் வயர் இல்லாத இணைப்பாக மடிக்கணினி மற்றும் அலைபேசிகளிலும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு உன் அபாரத் திறமையையும் வேகத்தையும் எண்ணி வியந்தேன்.

M.மீனாட்சி, C.A.

எனக்கென்று கல்லூரிக் காலம் என்று தனியாக எதுவும் இல்லை. 1994-97ஆம் ஆண்டுகளில் டிப்ளமா படித்தேன். அதன் பின்னர் வேலை செய்துகொண்டே பி.காம். படித்தேன். டிப்ளமா படித்த அந்த மூன்று ஆண்டுகள் பள்ளியும் அல்லாத கல்லூரியும் அல்லாத ஒரு இடைப்பட்ட நிலையிலேயே கடந்துவிட்டது. கமெர்ஷியல் பிராக்டிஸ். பி.காம் படிப்புக்கான அத்தனை பாடங்களும் இதில் அடக்கம். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பி.காம். படிக்க வேண்டிய நிலை வந்தால் எப்படி இருக்கும்? முதல் வருடம் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் அடுத்த வருடங்களில் சுதாரித்துவிட்டேன். பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியே வரும்போது டிஸ்டிங்ஷன். விஷயம் அதுவல்ல.

படிப்பினை

அவர் பெயர் பாஸ்கரன். போன வாரம் வரை எதிர் வீட்டுக்காரர். ஐம்பது லட்சத்துக்கு வீட்டை விற்றுவிட்டார். வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை. வீட்டை விற்று வந்த பணத்தில் வங்கியின் நிலுவைத்தொகை முழுவதும் வட்டியுடன் கட்டிவிட்டார். இப்போது மடிப்பாக்கத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு வேறு வீடு பார்த்து சென்றுவிட்டார்.

மூன்றாமாண்டு வலைப்பதிவர் திருவிழா - பின்னணி விவரங்கள்

தமிழ் வலைப்பதிவர் குழுவின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மதுரையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக மே மாதத்தில் மதுரையைச் சேர்ந்த பதிவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன், உணவு உலகம் சங்கரலிங்கம், சிவகாசிக்காரன் ராம்குமார் ஆகியோருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சீனா ஐயா, பிரகாஷ், ரமணி ஐயா மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் கண்டிப்பாக மதுரையில் நடத்திவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கத்தி

ஒரு கார்பரேட் நிறுவனம் குளிர்பான தொழிற்சாலை தொடங்கி தன்னூத்து கிராமத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களை அபகரிக்க நினைக்கிறது. தன்னூத்து கிராமத்தை சுற்றியிருக்கும் மற்ற கிராமங்கள் அந்த நிறுவனத்துக்கு தங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட, இவர்கள் மட்டும் விற்க மறுக்கிறார்கள்.