ஆண்டிராய்டில் உங்கள் உடல்நலம்
Thursday, September 12, 2013
Posted by கார்த்திக் சரவணன்
நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம். தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்? நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா? முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.
எழவு
Wednesday, September 11, 2013
Posted by கார்த்திக் சரவணன்
நான் ராயப்பேட்டையில் வசித்த சமயம். நான் இருந்த வீடு ஒரு முட்டு சந்தின் கடைசி வீடு. நாங்கள் இருந்தது தரை தளத்தில். மேல் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார். ஓனர் என்றால் ஓனர் அம்மா. வீடு அந்த அம்மாவின் பெயரில் இருந்ததால் அவரது கணவர் ஒரு டம்மி பீசாகவே நடத்தப்பட்டு வந்தார். எங்கள் வீட்டுக்கு நேர் எதிரில் எங்களைப்போன்றே தரை தளத்தில் வாடகைக்கு வசிப்பவர்களும் மேல் வீட்டில் அந்த வீட்டின் ஓனரும் வசித்துவந்தனர். அந்த வீட்டு ஓனரும் அம்மாதான். அவர்களும் எங்கள் ஓனரும் சொந்தக்காரர்கள். இருவரும் அவரவர் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு சத்தமாக அவரவர் வீட்டுக் கதைகளைப் பேசுவது வழக்கம்.
பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு
Tuesday, September 10, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
கடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.
ஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்
Monday, September 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ஒரு படம்
நேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ. ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான் பாடிய பாடல்
Monday, September 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
பதிவர் சந்திப்பில் பாடல் பாடப்போவதாக பதிவு ஒன்று எழுதியதும் அன்றிலிருந்து "பாட்டு பாடலையா, பாட்டு பாடலையா" என்றும் பதிவர் சந்திப்பு முடிந்ததிலிருந்து இன்றுவரை "ஏன் பாடலை" என்றும் பலரும் அன்போடு (!) விசாரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தொண்டை சரியில்லாத காரணத்தாலும் பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலும் பாடுவது ரத்து செய்யப்பட்டது. இருந்தும் கோவை ஆவியின் பாடலுக்கு கோரஸ் பாடியது மனதுக்கு திருப்தியாக இருந்தது. இந்த நிகழ்வு கடந்த வருடம் நடந்த முக்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்தது.
பதிவர் திருவிழா 2013 - துளிகள்
Wednesday, September 04, 2013
Posted by கார்த்திக் சரவணன்
பதிவர் திருவிழா 2013 - துளிகள்
இந்த வருட பதிவர் சந்திப்பில் என் கண் முன் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இல்லையென்றால் சிலவற்றை மறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்
Tuesday, September 03, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....
Subscribe to:
Posts (Atom)