Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?

நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மெட்ரோவில் பயணித்து வருகிறேன். நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை கடந்த ஜூன் வரை பயணித்திருக்கிறேன். அதற்குப் பிறகு, என் அலுவலகம் நந்தனத்திற்கு மாறிவிட்டதால் தற்போது வரை நந்தனம் வரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
மெட்ரோ பயண அட்டையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று டிராவல் அட்டை, மற்றொன்று டிரிப் அட்டை. நான் இரண்டு அட்டைகளையும் வைத்திருக்கிறேன். இவற்றில் டிராவல் அட்டை என்பது சென்னை மெட்ரோவில் எங்கிருந்தும் எங்கு வரையிலும் பயணிக்கக்கூடியது. டிரிப் அட்டை என்பது குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய அளவிலான அட்டை. (முந்தைய நிலையங்களிலும் இறங்கிக்கொள்ளலாம்) டிரிப் அட்டைக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், டிராவல் அட்டைக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். உதாரணமாக, நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை பயணக் கட்டணம் ரூ.40. எந்த அட்டையும் இல்லாத ஒருவர் 40 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், டிராவல் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 36 ரூபாய் செலுத்தினால் போதுமானது. டிரிப் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 32 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பணம் செலுத்தும் முறை: பணத்தை ரொக்கமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் அட்டை மூலமாகவோ செலுத்தலாம். டிராவல் அட்டைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், டிரிப் அட்டைக்கு நாம் எத்தனை டிரிப் என்று கணக்கிட்டு அந்தத் தொகையைத்தான் செலுத்த வேண்டும். உதாரணமாக, என் டிரிப் அட்டையில் வாரம் 320 ரூபாய் (10 டிரிப்) செலுத்துவேன். (காலை அலுவலகம் செல்வதற்கு ஒன்றும், மாலை திரும்ப வருவதற்கு ஒன்றும் ஆக மொத்தம் வாரத்திற்கு 10 டிரிப்). 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு, டிரிப் அட்டைக்கு 320 போக மீதம் உள்ள 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்திவிடுவேன்.
பணம் கழிவது எப்படி? நுழைவாயிலில் எந்திரத்தாலான தடுப்பு போடப்பட்டிருக்கும். அந்த எந்திரத்தில் அட்டையை வைப்பதற்கான இடம் ஒன்றும் இருக்கும். அந்த இடத்தில் நமது அட்டையை வைத்தால், நாம் உள்ளே செல்வது உறுதி செய்யப்பட்டு, தடுப்பு திறக்கும். டிராவல் அட்டை என்றால், எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும், டிரிப் அட்டை என்றால், எத்தனை டிரிப் மீதம் இருக்கிறது என்பதையும் அங்கிருக்கும் திரை காட்டும். நாம் சென்று சேர வேண்டிய நிலையம் வந்து அடைந்ததும், வெளியேறும் வழியில் மீண்டும் நாம் அட்டையை வைக்க வேண்டும். அப்போது அங்கிருக்கும் திரையில் பணம் கழிந்ததைக் காட்டும். டிராவல் அட்டையாக இருந்தால் 36 ரூபாய் கழிந்து மீதம் உள்ள தொகையைக் காட்டும். அதே நேரத்தில், தடுப்புக் கதவும் திறந்துவிடும். டிரிப் அட்டையாக இருப்பின், மீதம் உள்ள டிரிப் எண்ணிக்கையைக் காட்டும். நான் எதற்காக 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்துகிறேன் என்ற கேள்வி எழலாம். முன்பெல்லாம் வண்டி நிறுத்துவதற்குப் பணம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு 15 ரூபாய் வரும். இப்போது பணம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக டிராவல் அட்டையை வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அங்குள்ள பணியாளர்களிடம் கிரெடிக் கார்டு தேய்க்கும் எந்திரம் போன்ற எந்திரம் ஒன்று இருக்கும். காலையில் உள்ளே நுழையும்போது அட்டையை அதில் வைத்துவிட, அது நேரத்தைக் குறித்துக்கொள்ளும். மாலையில் வண்டியை எடுத்துவிட்டு வெளியேறும்போது மீண்டும் அட்டையை வைத்தால் அதில் பணம் கழிந்துவிடும்.
இப்போது இன்னொரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிராவல் அட்டைக்குப் பாதித் தொகை மட்டுமே வசூலிக்கிறார்கள். அதுபோன்ற நாட்களில் எனக்கு டிராவல் அட்டையில் பயணம் செய்வது லாபகரமாக இருக்கிறது.
கோராவில் கேட்கப்பட்ட "சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?" என்ற கேள்விக்கு என் பதில்.

உங்களுக்கு போன் செய்தது யார்?

உங்களுக்கு போன் செய்தது யார்?






முன்பெல்லாம் நம் வீட்டில் லேண்ட்லைன் மட்டும்தான் இருந்தது
. ஒருவருடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அந்தப் புத்தகத்தில் தேடுவோம். ஆனால் இப்போது லேண்ட்லைன் என்பது வழக்கொழிந்து வருகிறது. அனைவரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். சிலர் இரண்டு மூன்று எண்கள் வரை வைத்திருக்கிறார்கள். அனானிமஸ் மற்றும் மிரட்டல் விடுக்கும் நபர்கள், தவறான எண்ணுக்கு டயல் செய்துவிட்டு அது பெண்ணாக இருந்தால் கடலை போடும் நபர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஏன் நாமே சிலருக்கு நமது செல்போன் எண்ணைக் கொடுத்திருப்போம் ஆனால் நமது போனில் அவர்களுடைய எண்களை பதிவேற்றியிருக்க மாட்டோம். திடீரென்று நமக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அது யாரென்று யோசிப்போம். போனை எடுத்து பேசியபிறகு "அட, இவர்தானா" என்று நினைப்போம். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. உங்கள் செல்போன் அழைக்கும்போதே அது யாருடையதென்று நொடிகளில் தெரிவிக்கும் ஆண்டிராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. அதுதான் "Truecaller - Global Directory".




உலகத்திலுள்ள தொலைபேசி எண்களில் சுமார் 80 சதவீதம் வரை இவர்களுடைய டைரக்டரியில் இருக்கிறது.  அது எப்படி என்று இவர்களுடைய தளத்தில் சென்று விசாரித்தால் பல விதமான டைரக்டரிகளில் இருந்து எண்களை சேகரித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். மேலும் ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் போன் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இவர்களுடைய டேட்டாபேஸில் தங்களுடைய போனில் இருக்கும் contact விபரங்களை அப்லோட் செய்கிறார்கள்.





எப்படி வேலை செய்கிறது?  இந்த அப்ளிக்கேஷனை உங்களுடைய போனில் நிறுவிவிட்டால் போதும்.  ஏதாவது ஒரு எண்ணிலிருந்து போன் வரும்போது அந்த எண் உங்களது கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லையென்றால் தானாகவே தேடத்துவங்குகிறது.  ஒரு சில நொடிகளில் யாரிடமிருந்து அழைப்பு வந்தது என்பதையும் சிறு விண்டோவில் காட்டிவிடுகிறது.  இவர்களுடைய டேட்டாபேஸில் அந்த எண் இல்லாதபட்சத்தில் "No Matches Found" என்று காட்டிவிடுகிறது.







இந்த அப்ளிகேஷன் மூலம் ஒரு அருமையான வசதி உண்டு.  தேவையற்ற அழைப்புகளை நாம் block செய்துவிடலாம்.  இதன்மூலம் நமக்கு வரும் வங்கி இன்சூரன்ஸ் மற்றும் பிற தேவையற்ற அழைப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.  நமக்கு எந்த எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த எண்ணை blacklist என்ற இடத்தில் உள்ளீடு செய்தால் போதும்.  அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பு தடுக்கப்படும். அதற்கும் இவர்கள் ஒரு பெரிய டேட்டாபேஸ் வைத்திருக்கிறார்கள்.  நம்மைப்போல் பயனாளர்கள் உள்ளீடு செய்த எண்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது.




இன்னுமோர் சிறப்பான விஷயம் என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் எந்த எண்ணுடைய கான்டாக்ட் பெயரை வேண்டுமானாலும் நாம் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.  அந்த எண் இவர்களுடைய டேட்டாபேசில் இருந்தால் போதும். உங்களுக்கு அந்த நபரின் பெயரைக் காட்டிவிடும்.


 
இந்த அப்ளிக்கேஷனைப் பெற என்ன தேவை?



ஆண்டிராய்ட் அல்லது விண்டோஸ் வசதியுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்பு.  இன்டர்நெட் எப்போதும் ஆன்லைனில் இருக்க வேண்டும்.  அப்போது தான் அழைப்பு வந்தவுடன் இந்த அப்ளிகேஷன் தனது செர்வரில் உள்ள தகவல்களைத் தேடுவதற்கு எளிதாக இருக்கும்.



மேலும் தகவல்களுக்கு  www.truecaller.com  என்ற முகவரியில் காணவும்..

நன்றி...